care

Dr.S.தன்வந்திரி பிரேம்வேல் தன்வந்திரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலை

1945 ம் ஆண்டு டாக்டர்.S.வேலாயுதம் பிள்ளை அவர்களால் மதுரையில் சிறப்பான முறையில் ஆயுர்வேத மருத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவரை தொடர்ந்து டாக்டர்.V.சோமசேகர் அவர்கள் சிறப்பாக அப்பணியை தொடர்ந்தார். மக்களுக்கான இந்த சேவையை தொடர்ந்து மூன்றாம் தலைமுறையாக டாக்டர்.S. தன்வந்திரி பிரேம்வேல் B.A.M.S.F.W.AI.M(USA) அவர்கள் அனைவரும் போற்றும் விதமாக தொடர்ந்து வருகிறார்.தன்வந்திரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலையின் முக்கிய நோக்கமே ஒவ்வொரு மனிதனுக்கும் சிறப்பான ஆயுர்வேத மருத்துவம் சென்றடைய வேண்டும் என்பது தான். எங்களிடம் பழமையான ஆயுர்வேத குறிப்புகள் ஏராளமாக இருப்பதால் எந்த ஒரு நோய்க்கும் பக்க விளைவு இல்லாமல் சிறப்பான முறையில் தீர்வு காண முடியும். பாரம்பரிய தன்வந்திரி முறைகளை நவீனமயமாக்கி ஆயுர்வேதத்தின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தி தமிழ்நாடு முழுவதும் 23-க்கும் மேற்பட்ட தரமான ஆயுர்வேத வைத்தியசாலைகளை நிறுவியுள்ளது.

நாடி பரிசோதனையின் மூலம் ஆரோக்கியத்தை ஆராய்ந்து மூலிகை மருத்துவத்தினாலும் உயர் ரக மருத்துவ முறையான பஞ்சகர்மா சிகிச்சை மற்றும் யோகா பயிற்சியின் மூலம் எந்த ஒரு உடல் பிரச்சனைக்கும் பக்க விளைவுகள் இன்றி தீர்வு காண இயலும். பரபரப்பான இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் மாசு, மனஅழுத்தம், தூக்கமின்மை , சத்து இல்லாத ஆகாரங்கள் என்று ஏராளமான விஷயங்கள் நம் ஆரோக்கியத்தை சீர் குலைக்கின்றன. இந்த ஒரு நிலையில் மற்ற மருத்துவ முறைகளை காட்டிலும் ஆயுர்வேத முறை மருத்துவம் தாவரங்களையும் கனிமத்தையும் மையமாக வைத்து மருந்துகள் தயாரிப்பதால் பக்க விளைவுகள் இருப்பதில்லை.

தன்வந்திரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலை, இந்தியாவின் தலைசிறந்த ஆயுர்வேத மருத்துவ சாலை. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்ணக்கான மக்களை ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்த எங்கள் வைத்தியசாலை உதவுகிறது. கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல இடங்களில் எங்கள் முறை சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளளது. எங்களிடம் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் பல்வேறு மருத்துவ முறைகளை கற்று தேர்ந்தவர்கள். நாடி பரிட்சையில் எங்கள் மருத்துவர்கள் வல்லவர்கள். நவீன கருவியை கொண்டு கண்டுபிடிக்க முடியாத பிரச்சனைகளை கூட நாடி பரிசோதனையில் எங்கள் மருத்துவர்கள் கண்டறிந்து சிறப்பான முறையில் சிகிச்சைகள் வழங்குவார்கள். தன்வந்திரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலை ஒரு சிகிச்சைக்கான இடம் மட்டும் இல்லாமல் நீங்கள் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தவும் எங்கள் மருத்துவர்கள் உதவுவார்கள்.